யோக்சியர் தமிழர்களின் விளையாட்டு போட்டி
யோர்க்சியர் தமிழர்விளையாட்டு போட்டி 16-07-2017 அன்று நடைபெற்றது.
வெற்றிகரமாக நிறைவடைந்த 1வது யோர்க்சியர் தமிழர் விளையாட்டு போட்டியில் சுமார் 140க்கு மேற்பட்ட சிறுவர்கள் பங்கு பெற்றியது இங்கு குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வு Doncaster Keepmoat stadiumமில் திரு லவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .
இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக Doncaster civic mayor மதிப்புக்குரிய திரு Clarr George Derx அவர்கள் , Doncaster councillor மதிப்புக்குரிய திரு McHale John அவர்கள், உலகதமிழர் வரலாற்று மையபொறுப்பாளர் திரு சங்கீதன் அவர்கள்,நாடுகடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை
அமைச்சர் மதிப்புக்குரிய திரு ஜோதிலிங்கம்அவர்கள் மற்றும் BTF அமைப்பை சார்ந்த திரு நிக்சன் அவர்கள், திரு சுதா அவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வு சிறுவர்களின்அணிவகுப்பு மரியாதையுடன்ஆரம்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து Doncaster civic மேயர் மதிப்புக்குரிய Clarr George Derx அவர்கள் பிரித்தானிய தேசியகொடியை ஏற்றிவைத்தார் அத்தோடு உலக தமிழர் வரலாற்றுமைய பொறுப்பாளர் திருசங்கீதன் அவர்கள் தமிழீழ தேசிய கொடியைஏற்றி வைத்தார். கொடி வணக்க பாடல் நிறைவுபெற அதனைத் தொடர்ந்து யோர்க்சியர் தமிழ் சமூக கொடியை அதன் தலைவர் திரு லவன் அவர்களும்,யோர்க்சியர் பொது தமிழ்பாடசாலை கொடியை அதன் தலைமை ஆசிரியர் திருமதி ஏஞ்சல் அவர்களும், சவுத்யோர்க்சியர் தமிழ்பாடசாலை கொடியை ஆசிரியர் திருமதி ரஞ்சனா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதைதொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மதிப்புக்குரிய திரு ஜோதிலிங்கம் அவர்களால் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது .
அதனை தொடர்ந்து Olympic தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
எல்லாளன், சங்கிலியன்,பண்டாரவன்னியன் ,ஆகிய 03 இல்லங்களாக சிறுவர்கள் போட்டியில் கலந்துகொண்டனர்.குறித்த விளையாட்டுப்போட்டியில் பச்சை இல்லமாகிய சங்கிலியன் இல்லம் முதலிடத்தை தனதாக்கிக்கொண்டது.
சிவப்பு இல்லமாகிய எல்லாளன் இல்லம் இரண்டாம் இடத்தை பெற்றது. மஞ்சள்இல்லமாகிய பண்டாரவன்னியன் இல்லம் மூன்றாம்இடத்தைபெற்றுக்கொண்டது.
நிகழ்வின் இறுதியில் விருந்தினர்கள் உரை நடைபெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கொடி இறக்கத்துடன் 2017 ஆம்ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இனிதே நிறைவுபெற்றது.
இந் நிகழ்வில் கலந்துசிறப்பித்த தமிழ் உறவுகளுக்கும்,சிறுவர்களுக்கும் மற்றும் இவ் போட்டிக்கான ஆயத்த பணிகளுக்கு இரவு பகலாக பணிபுரிந்தஎமது
உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கும்,இந் நிகழ்வின் போது மைத்தனத்தில் சிறப்பாகபணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் இவ்வேளையில் யோர்க்சியர் தமிழ் சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம் .






























































































































